×

டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

 

விருதுநகர், மே 4: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 573 மஸ்தூர் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு கடந்த 1.7.2023 முதல் தினசரி ஊதியமாக ரூ.490 வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பணியில் இருந்த 573 மஸ்தூர் பணியாளர்களை கடந்த ஏப்.1 முதல் 30 வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் விருதுநகர் ஒன்றியத்தில் 53 மஸ்தூர் பணியாளர்களும் மற்ற 10 ஒன்றியங்களில் தலா 50 பணியாளர்கள் என 573 பேர் பணியில் இருந்தனர். மே.1 முதல் விருதுநகர் ஒன்றியத்தில் 23 மஸ்தூர் பணியாளர்களும் மற்ற 10 ஒன்றியங்களில் தலா 20 பணியாளர்கள் என 223 பேருக்கு மட்டும் தினசரி வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...